No results found

    கோட்டாட்சியர் ஆய்வு


    கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் மற்றும் நஞ்சை புகளூர் கிராமங்களில் 50 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா 1705 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக 2-ஆம் கட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூர் கோட்டாட்சியர் ரூபினா தலைமையில், புகழூர் வட்டாட்சியர் முருகன், புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி ஆணையாளர் கனிராஜ், கரூர் மாவட்ட நில அளவை பிரிவு உதவி இயக்குனர், மண்டல துணைத்தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், நில அளவையர்கள் கொண்ட குழுவினர் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    Previous Next

    نموذج الاتصال