No results found

    மகாவீர் ஜெயந்தி: மதுக்கடைகளை 4-ந் தேதி மூட உத்தரவு- கலெக்டர் அறிவிப்பு


    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஏப்ரல் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال