No results found

    ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம்

    இந்த தேவியானவள் சிம்மாசனத்தில் எட்டு கைகளுடன் அமர்ந்து, அந்தக் கரங்களில் கத்தி, பாடக்கயிறு, சக்கரம், அபயம், கேடயம், அங்குசம், சங்கம், வரதம் இவைகளுடன் காட்சி தருகின்றாள். அருகில் அன்னப்பறவையும் காணப்படுகிறது. எல்லாவித அலங்கார, தோரணைகளுடன் தலையில் கிரீடமணிந்து காட்சி தருகிறாள்.

    தியான சுலோகம்:-

    அஷ்ட பாஹீயுதாம்தே வீம்
             ஸிம்ஹாசன வரஸ்த்திதாம்
    சுகாஸநாம் சுகேசீம்ச
             கிரீட மகுடோஜ்வலாம்
    ச்யாமாங்கீம் கோமளாகாரம்
             சர்வாபரண பூஷிதாம்
    கட்கம் பாசம் ததா சக்ரம்
             அபயம் சவ்ய ஹஸ்தகே
    கேடகஞ் சாங்குசம் சங்கம்
             வரதம் வாமஹஸ்தகே
    ராஜரூபதராம் சக்திம்
             ப்ரபா செளந்தர்ய சோபிதாம்
    ஹம்சாரூடாம் ஸ்மரேத்
             தேவீம் விஜயாம் விஜயாப்தயே


    பலன்கள்:-

    மனித வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் உரிய காரண தேவதையாக இருப்பவள் ஸ்ரீவிஜயலட்சுமி, இவளது அருட்பார்வை இருந்தால்தான் தொடர்ந்து வெற்றியை அடைய முடியும். மேற்கூறிய சுலோகத்தை 108 முறை தினமும் பக்தியுடன் முறைப்படி கூறி ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்த தேவியை வழிபட்ட பின்னரே எந்த முயற்சியையும் தொடங்க வேண்டும். ஸ்ரீவிஜயலட்சுமியை அலட்சியம் செய்து தொடங்கப் பெறும் எந்த முயற்சியிலும் வெற்றியே கிட்டாது என உணர வேண்டும்.
    Previous Next

    نموذج الاتصال