ஸ்ரீ வீரலட்சுமி தனது எட்டுக்கைகளிலும் அபயம், சக்கரம், சூலம், பாணம்,
வரதம், சங்கு, வில், கபாலம் ஏந்தி வெற்றி மாலையுடன் காட்சி தருகின்றாள்.
தியான சுலோகம்:-
அஷ்டபாஹியுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாசந வரஸ்த்திதாம் தப்த காஞ்சந சங்காசாம் கிரீட மகுடோஜ் வலாம் ஸ்வர்ண கஞ்சுக சம்யுக்தாம் ச்சன்ன வீரதராம் ததா அபயம் வரதஞ் சைவ புஜயோ:சவ்ய வாமயோ: சக்ரம் சூலஞ்சபாணஞ் ச சங்கம் சாபம் கபாலம் தததீம் வீரலக்ஷ்மீஞ் ச நவதாலாத் மிகாம் பஜே. |
பலன்கள்:-
இந்த சுலோகத்தை தினமும் 108 முறை பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ வீரலட்சுமி அளிப்பாள். எனவே, இச்சுலோகத்தை தவறாமல் தினமும் கூறி வழிபட வேண்டும்.