No results found

    ஸ்ரீ தான்யலட்சுமி ஸ்தோத்திரம்

    ஸ்ரீ தான்யலட்சுமி தலையில் ஒளிபொருந்திய கிரீடம் அணிந்து, கைகளில் செந்தாமரை, கரும்பு தாங்கி சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கின்றாள். எல்லாவிதமான அலங்காரங்களும் இவளிடத்தில் ஜொலிக்கின்றன.

    தியான சுலோகம்:-

    வரதாபய சம்யுக்தாம்
             கிரீட மகுடோஜ்வலாம்
    அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச
             கதலீ பலத்ரோணிகாம்
    பங்கஜம் தக்ஷவாமேது
             ததாநாம் சுக்லரூபிணீம்
    க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம்
             சுகாசந சமந்விதாம்
    சர்வாலங்கார சம்யுக்தாம்
             சர்வாபரண பூஷிதாம்
    மதமத்தாம் மநோஹரி
             ரூபாம் தான்யட்ரீயம் பஜே


    பலன்கள்:-

    மேற்கண்ட சுலோகத்தை தினமும் 108 முறை கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறைந்து விளங்கும். நம் வாழ்வில் உணவுப் பஞ்சமே இராது.
    Previous Next

    نموذج الاتصال