ஸ்ரீ தான்யலட்சுமி தலையில் ஒளிபொருந்திய கிரீடம் அணிந்து, கைகளில்
செந்தாமரை, கரும்பு தாங்கி சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கின்றாள்.
எல்லாவிதமான அலங்காரங்களும் இவளிடத்தில் ஜொலிக்கின்றன.
தியான சுலோகம்:-
வரதாபய சம்யுக்தாம் கிரீட மகுடோஜ்வலாம் அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச கதலீ பலத்ரோணிகாம் பங்கஜம் தக்ஷவாமேது ததாநாம் சுக்லரூபிணீம் க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம் சுகாசந சமந்விதாம் சர்வாலங்கார சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம் மதமத்தாம் மநோஹரி ரூபாம் தான்யட்ரீயம் பஜே |
பலன்கள்:-
மேற்கண்ட சுலோகத்தை தினமும் 108 முறை கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறைந்து விளங்கும். நம் வாழ்வில் உணவுப் பஞ்சமே இராது.