இந்தப் பகுப்பாய்வின் மூலம் நீங்கள் அடைய விரும்பும் இறுதி இலக்கை அடையாளம் காணவும்.. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.. உங்கள் இலக்கு அடையக் கூடியதாகவும்,நம்பகமானதாகவும், எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்குள்ளும் இருக்க வேண்டும்..
*உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அடையாளம் கண்டு அவற்றை பட்டியலிட்டு எழுதுங்கள்.
* உங்களது வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை கண்டு பிடியுங்கள். அடுத்து, உங்கள் வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் உள் அல்லது வெளிப்புற அச்சுறுத்தல்களை சரி பார்க்கவும்..
மாணவர்களுக்கான ஸ்வாட் பகுப்பாய்வை மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு பிரிவிற்கும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்விகள் இங்கே:
*உங்கள் சிறந்த பண்புகள் என்ன?
* கல்வித்தகுதிகள், பணி அனுபவம், இணையத்தளம் போன்றவற்றின் அடிப்படையில் உங்களிடம் என்ன வித்தியாசமான அனுகூலங்கள் இருக்கின்றன?
* உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் என்ன உத்திகளை பயன்படுத்துகிறீர்கள்?
* மற்றவர்கள் உங்களிடம் பார்க்கும் பிளஸ் புள்ளிகள் என்ன?
*உங்கள் வாழ்க்கைப் பாதையில் முதலீடு செய்ய என்ன வகையான வளங்கள் உள்ளன?
*எ ன்ன ஆளுமைப் பண்புகளை மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
* அறிவு அல்லது நம்பிக்கையின்மை காரணமாக எந்த வகையான பணிகளைத் தவிர்க்கிறீர்கள் ?
*உங்கள் எதிர்மறை பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் என்ன?
*உங்கள் வாழ்க்கையில் முன்னேற என்ன வகையான ஆதாரங்கள் இல்லை?
* உங்கள் பலத்தை சாத்தியமான வாய்ப்புகளாக மாற்றுவதன் மூலம் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம்?
* நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வளர்ந்து வரும் போக்குகள் என்ன மற்றும் அந்த போக்குகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்?
* சிறந்த வாய்ப்புகளை தேட உங்கள் நேரத்தை எவ்வாறு திறமையாக பயன்படுத்தலாம்?
*நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் எது போன்ற தடைகளை எதிர் கொள்கிறீர்கள்?
*உங்கள் பலம் ஏதேனும் உங்களை தடுத்து நிறுத்துகிறதா ?
*உங்கள் பலவீனங்கள் ஏதேனும் உங்களை வெற்றி பெற விடாமல் தடுக்கிறதா?
இந்த பகுப்பாய்வு உங்களுக்கு பல வழிகளில் எவ்வாறு உதவுகின்றது என்பதை பார்ப்போம்:
*உங்களை நீங்களே நன்றாக புரிந்துகொள்ள உதவுகின்றது.
* உங்கள் பலவீனங்களை தெரிந்து அதில் வேலை செய்வதை தெளிவுபடுத்துகின்றது.
* உ ங்கள் பலத்தில் கவனம் செலுத்த உதவுகின்றது..
*உங்களுக்கு உண்டான வாய்ப்புகளை கண்டுகொள்ள உதவுகின்றது.
* அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவுகின்றது.
* கால நிர்வாகம் செய்வதற்கு துணை நிற்கின்றது.