No results found

    மீண்டும் வாடகைக்கு இடம் தேடும் மதுரை எய்ம்ஸ்: மருத்துவ மாணவர்கள் அவதி


    2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் அதிநவீனமான அமைக்கப்படும் என தெரிவிக்கபட்டது.

    அந்த அடிப்படையில், சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் ஜப்பானில் இருக்கக்கூடிய ஜெய்கா நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2019-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டு முழுமையாக அந்த இடம் எந்த வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.

    3 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக எய்ம்ஸ் மருத்தமனைக்கான மாணவர்கள், ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனாலும் அங்கு, பயிற்சி உபகரணங்கள் போதுமானதாக இல்லாத நிலை தான் நீடித்தது.

    இதனை தொடர்ந்து 3 ஆண்டுகள் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை அங்கு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை எய்ம்ஸ் நிர்வாகம் எடுத்திருந்தது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டியும் இன்னும் கட்டடம் இல்லாததால், மருத்துவக் கல்லூரியை நடத்த மீண்டும் வாடகைக்கு இடம் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இதற்காக டெண்டர் வெளியிடபட்டு, திருமங்கலத்தில் உள்ள செயல்படாத ஒரு நர்சிங் கல்லூரியை வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்த எய்ம்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال