பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க. சார்பில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து தே.மு.தி.க, பொதுச்செயலாளர் பிரேமலதா உடன் அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், பேச்சுவார்த்தைக்காக இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 4 இடங்களில் தே.மு.தி.க. போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.