No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 94


    பலன்: மன நோய் அகலும்

    விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
    அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
    *சுரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
    தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே

    பொருள்:

    அபிராமி அம்மையை விரும்பித் தொழும் அடியவர்கள்:
    1. அவர்களின்

    • கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகும்  
    • மெய் சிலிர்க்கும்

     2. அவர்களிடத்தே:

    • ஆனந்தம் மட்டுமே ததும்பும் 

    3. அவர்கள்;

    • தன்னையே மறந்து, தேனில் மனம் களிப்புறும் வண்டுப்போல் மகிழ்வுற்றிருப்பார்கள்.
    • மொழி தடுமாறி, அன்னையை எவ்வாறு வர்ணிப்பது என்று தவிப்பார்கள். 

    ஆனந்தத்தில் வார்த்தைகள் வருவது கடினம் அல்லவா?
    இவ்வாறு பக்தியால் பித்தர்களை போல் அலைவார்கள். இப்படிப்பட்ட பேரானந்த நிலை தமக்கு கிடைக்க வேண்டும் என்றால், அபிராமியிடம் தஞ்சம் அடைய வேண்டும்.

    *சுரும்பின் களித்து - சுரும்பு (தேன்). சில இடங்களில் கரும்பின் களித்து என்று வருகிறது. கரும்பும் இனிமை, தேனும் இனிமை. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். முன்பு கூறியது போல், அம்பாளுக்கு சுரும்பார் குழலி என்று ஒரு பெயர். அப்படியானால் தேன் போல இனிய கூந்தலை உடையவள் என்று பொருள்.

    பாடல் (ராகம் - புன்னாகவராளி, தாளம் - --விருத்தம்--) கேட்க

    Previous Next

    نموذج الاتصال