பலன்: அன்னையின் நினைவு என்றும் நம் சிந்தையில் நிலைத்திருக்கும்
சிறக்கும் கமலத் திருவே, நின் சேவடி சென்னி வைக்கத்,
துறக்கம் தரும் நின் துணைவரும், நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று, அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.
பொருள்:
சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே, அபிராமியே, என் உடலுக்கும் உயிருக்கும் தொடர்பு இன்றி, அறிவு மறதி மிகுந்திருக்கும் சமயத்தில் (மூப்பு) உன் பாதம் என் தலை மீது இருக்க வேண்டும். மேலும் அடியார்களுக்கு மோன நிலையினை தரும் உன் துணைவர் சிவபெருமானும், நீயும் என் முன்னே வந்து, எனக்கு மோன நிலையினை (சமாதி) தர வேண்டும்.
பாடல் (ராகம்-லதாங்கி, தாளம்- --விருத்தம்--) கேட்க