No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 81


    பலன்: நன்னடத்தை உண்டாகும்

    அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள். ஆகையினால்
    வணங்கேன், ஒருவரையும் வாழ்த்துகிலேன், நெஞ்சில் வஞ்சகரோடு
    இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்,
    பிணங்கேன், அறிவு ஒன்றிலேன், என் கண் நீ வைத்த பேரளியே.

    பொருள்:

    அழகிய பெண்ணே, அபிராமியே, மற்ற சக்திகள் யாவரும் உனது பரிவார தேவதைகள் தான். அதனால் அவர்களை வணங்க மாட்டேன். வேறொருவரையும் வாழ்த்த மாட்டேன். நெஞ்சில் வஞ்சனை நிறைந்தவரோடு சேர மாட்டேன். தன்னுடையது என்று கருதாமல், எல்லாம் அன்னையான உன்னுடையது என்று கருதும் சில அடியார்களோடு மட்டும் சேர்ந்திருப்பேன். அவர்களிடமிருந்து அகலமாட்டேன். அறிவற்றவன் நான். ஆனாலும் என் மீது பெருங்கருணை வைத்துள்ளாய் நீ.

    என்று பட்டர் பாடுகிறார்.

    பாடல்( ராகம்-ஆனந்த பைரவி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க

    Previous Next

    نموذج الاتصال