No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 80


    பலன்: எல்லை இல்லா ஆனந்தம் அடைவோம்

    அன்னையை கண்ட பின் பட்டர் பாடிய பாடல் அல்லவா? அதன் பின் ஆனந்தமயமே! வேறொன்றுமில்லை.

    கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
    ஒட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ள வண்ணம்
    காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
    ஆட்டியவா நடம், ஆடகத் தாமரை ஆரணங்கே!

    ஆடகத் தாமரை ஆரணங்கே - தடாகத்தில் பூத்திருக்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே! அபிராமியே!

    என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்த்தவளே! எனது கொடிய வினைகளை அழித்தவளே! எனது கண்ணின் முன் வந்தவளே! உன்னை உள்ளவண்ணம், ஒன்றுமே அறியாத எனக்கு காட்டியவளே! உன்னை கண்ட என் கண்களும், அனுபவித்த மனமும் மகிழ்ச்சியில் மிதக்கின்றன. என்னிடம் இப்படி நாடகமாடி, பின் நல்ல விதமான முடிவு ஒன்று வரவழைத்தவளே! உன் கருணையை என்னவென்று சொல்வது?!

    இவ்வாறு உணர்ச்சி பொங்க, அபிராமி பட்டர், அன்னையை கண்டதும் பாடி பரவசம் அடைகிறார். நாமும் நம் மனக்கன்ணினால் அன்னையை காண்போம். களிப்புறுவோம்!

    பாடல் (ராகம்-கௌரி மனோஹரி, தாளம் - ஆதி) கேட்க

    Previous Next

    نموذج الاتصال