பலன்: பிரிந்தவர் ஒன்று சேர்வர்
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே
பொருள்:
அபிராமியே எனது துணை, நான் தொழும் தெய்வம், என்னை பெற்ற தாய். அவளே வேதம், அதன் கிளை, வேர் அனைத்தும். தன் 4 கரங்களில், மலர்களால் ஆன அம்பு, கரும்பினால் ஆன வில், மென்மையான பாசம் (கயிறு) [இதிலும் மென்மை. அன்னையின் கருணை. சொற்ப விஷயங்களில் பற்று வைக்காதே, என பக்தனை மெல்லிய கயிற்றினால் கட்டுகிறாள்.], அங்குசம் ஆகியவற்றை கொண்டுள்ள திரிபுரசுந்தரி என்று அன்னை அபிராமியை அறிந்து கொண்டேன்.
லலிதா சஹஸ்ரநாமத்தில்
மன்மதனிடமும் கரும்பு வில், மலர் அம்பு இருக்கிறது. அதனால் காமம் (ஆசை) உண்டாகுகிறது. ஆனால் அன்னையிடம் இருக்கும் கரும்பு வில், மலர் அம்பு ஆகியவை நமக்கு காம ஜெயம் (ஆசையினை அடக்குதல் - வைராக்யம்) தருகிறது.
பாடல் - ராகம் கௌளை, தாளம் ஆதி
பொருள்:
அபிராமியே எனது துணை, நான் தொழும் தெய்வம், என்னை பெற்ற தாய். அவளே வேதம், அதன் கிளை, வேர் அனைத்தும். தன் 4 கரங்களில், மலர்களால் ஆன அம்பு, கரும்பினால் ஆன வில், மென்மையான பாசம் (கயிறு) [இதிலும் மென்மை. அன்னையின் கருணை. சொற்ப விஷயங்களில் பற்று வைக்காதே, என பக்தனை மெல்லிய கயிற்றினால் கட்டுகிறாள்.], அங்குசம் ஆகியவற்றை கொண்டுள்ள திரிபுரசுந்தரி என்று அன்னை அபிராமியை அறிந்து கொண்டேன்.
லலிதா சஹஸ்ரநாமத்தில்
- ராகஸ்வரூப பாஷாட்யா (ராகம் -பற்று , அம்பாள் மீது பற்று வரவேண்டும் என்பதற்காக அந்த பற்று வடிவாய் கயிற்றை வைத்துள்ளாள். அதை பக்தன் மீது செலுத்தி கட்டினால், அவனுக்கு அம்பாளை தவிர வேறொன்றும் தெரியாது.]
- க்ரோதாங்கார அங்குஷோஜ்வலா [குரோதம் -கோபம், அதனை அறுப்பதற்கு, அங்குசம்.]
- மனோரூபேக்ஷு கோதண்டா [மனம் எனபது கரும்பு வில் போன்றது.]
- பஞ்ச தன்மாத்ர சாயகா [சப்த (சத்தம்), ஸ்பர்ஷ (தொடு உணர்வு), ரூப (பார்வை), ரச (ருசி), கந்தம்(வாசனை) ஆகிய 5 உணர்வுகள் ]
மன்மதனிடமும் கரும்பு வில், மலர் அம்பு இருக்கிறது. அதனால் காமம் (ஆசை) உண்டாகுகிறது. ஆனால் அன்னையிடம் இருக்கும் கரும்பு வில், மலர் அம்பு ஆகியவை நமக்கு காம ஜெயம் (ஆசையினை அடக்குதல் - வைராக்யம்) தருகிறது.
பாடல் - ராகம் கௌளை, தாளம் ஆதி