No results found

    சட்டசபை நடுநிலையாக செயல்படுவதில்லை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விருத்தாசலம் பாலியல் தொல்லை தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பள்ளியின் உரிமையாளரான தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாததால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். "சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை. எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை எடுத்து வைக்கும்போது அரசுதான் அதை கவனித்து சரி செய்ய வேண்டும். அவை நடுநிலையோடு செயல்படுவதில்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 

    Previous Next

    نموذج الاتصال