கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 32 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஒரு நாளுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. ஆனால், அமைச்சர் நாசர் நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய் சொல்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கட்டுமானப் பொருட்கள் தொடங்கி, சொத்துவரி, குடிநீர், மின்சார கட்டணம், ஆவின் பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும், தமிழகத்தில் விலையை குறைக்கவில்லை. கடந்த 16 மாத கால தி.மு.க. ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது. கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் என பா.ஜ.க. சொன்னது. அதனை என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக டி.ஜி.பி.யையும் பொய் பேச வைத்துள்ளது. எத்தனை நாளுக்குத்தான் இந்த ஏமாற்று வேலையை பார்த்துக் கொண்டு இருப்பது? வரும் மக்களவை தேர்தலின்போது, தமிழகம் இந்த மாயையில் இருந்து வெளியேறி, தேசியத்தின் பக்கம் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.