No results found

    தொழில்நுட்பமும், திறமையும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் இரு தூண்கள்- பிரதமர் மோடி | Google Tamil News


    தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் இரு தூண்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் தகவல் காங்கிரஸ்-2022 கூட்டத்துக்கு பிரதமர் மோடி வீடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "நாடு அந்தியோதயாவின் தொலைநோக்குப் பார்வையில் செயல்பட்டு வருவதாகவும், அதாவது கடைசி மைலில் உள்ள கடைசி நபரை ஒரு பணி முறையில் அதிகாரம் அளிப்பது என்றும் பிரதமர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:- அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் தொகையான 450 மில்லியன் வங்கியில்லாத மக்களுக்கு வங்கி சேவையை வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகை அளவில் 135 மில்லியன் காப்பீடு செய்யப்படாத மக்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதி, 60 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை இந்தியா உறுதி செய்கிறது. நிகழ்நேர டிஜிட்டல் பணம் செலுத்துவதில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மேலும் சிறிய அளவிலான விற்பனையாளர்கள் கூட டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தியா சிறந்த புதுமையான உணர்வைக் கொண்ட ஒரு இளம் தேசம். நாம் உலகின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையங்களில் ஒன்றாக இருக்கிறோம். 2021 முதல், யூனிகார்ன் ஸ்டார்ட்- அப்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தியுள்ளோம். இதற்கு இந்தியாவின் இளம் திறமைதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال