No results found

    ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நெதர்லாந்து ராணி சந்திப்பு

    ஜனாதிபதி திரவுபதி முர்முவை நெதர்லாந்தின் ராணி மாக்சிமா நேற்று சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: நெதர்லாந்தின் ராணி மாக்சிமா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். ராணி மாக்சிமாவை வரவேற்ற ஜனாதிபதி, இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் நெதர்லாந்திற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் அன்புடன் நினைவுகூரப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற, இந்தியா-நெதர்லாந்து மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது தொடங்கப்பட்ட 'தண்ணீர் மீதான மூலோபாய கூட்டாண்மை' மூலம் இருதரப்பு உறவுகளும் சில ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களில் வலுவடைந்து வருவதாக கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال