இளமையுடன் வாழ:
நெல்லிக்காயை கொட்டை நீங்கி காயவைத்து பொடியாக்கி கொள்ளவும் எந்த இலையுடனும் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 1\4 கரண்டி நெல்லி பொடி சாப்பிட்டு வந்தால் இளமை நீடிக்கும்.
உடல் பருமன் குறைக்க:
பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர், மலம், சிறுநீர் வழியாகவும் வெளிப்பட்டு உடல் பருமன் குறையும்.
விஷம் முறிய:
கருவேலம் மரத்தின் கொழுந்தை மைபோல் அரைத்து கொட்டை பாக்கு அளவு எடுத்து ஒரு டம்ளர் தயிருடன் கலந்து உள்ளுக்கு கொடுத்து விட்டால் விஷம் முறிந்து விடும்.