ஜக்தீப் தன்கர், 1979 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தானில் வழக்கறிஞராக பணியாற்றிவர். 1990 ல் அவர் ராஜஸ்தானின் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மேலும் 2016 ஆண்டு சட்லஜ் நதி நீர் வழக்கில் ஹரியானா மாநிலம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியுள்ளார். இந்நிலையில் தற்போது குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், வலுவான, நியாயமான, சுதந்திரமான நீதித்துறை அமைப்பே, நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு அடிப்படையானது என்று தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் கண்ணியம், நீதித்துறைக்கான மரியாதை தவிர்க்க முடியாது என்றும் இவை சட்டம் மற்றும் அரசியலமைப்பு விதியின் அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய போது தனக்கு உறுதுணையாக இருந்த நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், வலுவான, நியாயமான, சுதந்திரமான நீதித்துறை அமைப்பே, நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு அடிப்படையானது என்று தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் கண்ணியம், நீதித்துறைக்கான மரியாதை தவிர்க்க முடியாது என்றும் இவை சட்டம் மற்றும் அரசியலமைப்பு விதியின் அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய போது தனக்கு உறுதுணையாக இருந்த நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.