No results found

    மக்களின் அடிப்படை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அமைச்சர் கே.என்.நேரு


    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் ஆவடி நாசர், சி.வெ கணேசன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    எப்போதும் இல்லாத அளவிற்கு நகராட்சி நிர்வாக துறை சீரியப் பணிகளை செய்து வருகிறது, மற்ற மாநிலங்களை காட்டிலும் நகராட்சி நிர்வாக துறை தமிழ்நாட்டில் நல்ல முறையில் வளர்ந்துள்ளது, 48 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள்தொகை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள முடியாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஏன் பணிகளுக்கு கால தாமதம் ஆகிறது என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கூற வேண்டும்.

    பஸ் நிலையங்கள், சந்தைகளில் கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளை தருவதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    ஒன்று, இண்டு ஆண்டாக நிலுவையில் உள்ள பணிகள் என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையாமல் இருந்ததால் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திட்டமிடல் வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال