No results found

    பிரதமர் மோடி வருகை: திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை


    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்தநிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال