பலன்: பெரும் துன்பம் யாவும் நீங்கும்
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய், கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய், சிந்தூரானன சுந்தரியே
பொருள்:
கமலாலயன் - தாமரையில் உதித்தவன் - பிரம்மன்
மதியுறு வேணி மகிழ்நன் - மதி - சந்திரன் (பிறை சந்திரன்). வேணி - வீணை உடையவள். பிறை சந்திரனை அணிந்தவள் - சரஸ்வதி.
பிரம்மனை கமலாலயன், மதியுறு வேணி மகிழ்நன் என்று பட்டர் கூறுகிறார்.
மால் - விஷ்ணு
அதாவது, பிரம்மனும், விஷ்ணுவும் வணங்கி, என்றும் துதிக்கும் சிவந்த பாதங்களை உடையவளே, சிந்தூர திலகம் நெற்றியில் அணிந்த அழகியே, அபிராமியே, (ததி - தயிர்) - தயிரை கடையும் மத்து போல, இவ்வுலகில் பிறப்பு - இறப்பு என்று என் ஆவி சுழலாமல் முக்திக்கு வழி வகுப்பாய்.
சௌந்தர்ய லஹரியில் ஆச்சர்யாள் தேவியின் பாத தூளியின் மகிமையை அவித்யனாம் என தொடங்கும் 3 வது ஸ்லோகத்தில்,
"ஜன்ம ஜலதௌ நிமக்னானம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி" என்று கூறியுள்ளார்.
அதாவது, சம்சாரம் என்னும் கடலில் மூழ்கியவனுக்கு அம்பாளின் பாத தூளி, வராஹத்தின் கோரை பற்கள் போல். வராஹ மூர்த்தி எப்படி, பூமி பிராட்டியை ஆழ் கடலிலிருந்து தன் கோரைப் பற்களால் தூக்கி நிறுத்தினாரோ அதுபோல அம்பாளின் பாத தூளியனது, சம்சார கடலில் மூழ்கி தத்தளிப்பவரை தூக்கி விடும்.
சம்சார சக்கரத்திலிருந்து என்னை விடுவிப்பாய் என்பதே இந்த பாடலின் சாரம்.
பாடல் (ராகம் - முகாரி, தாளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க