பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் பெருமளவில் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் 204 விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு தலைமையில் விதை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பாடாலூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், பசும்பலூர், வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின்போது பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களின் 100 எண்கள் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விதையின் தரம் சோதிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் தற்போது வரை 308 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் பெருமளவில் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் 204 விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு தலைமையில் விதை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பாடாலூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், பசும்பலூர், வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின்போது பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களின் 100 எண்கள் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விதையின் தரம் சோதிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் தற்போது வரை 308 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.