No results found

    புதிய சாலை அமைக்கும் பணிகள் 20 நாட்களில் தொடங்கப்படும்


    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம், சாத்தமங்க லம், சருகுவலையப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆற்று ஓரத்தில் மண் சாலை உள்ளது. இங்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி விவசாயி கள் சில நாட்க ளுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்ட ரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் இன்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகி யோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் புதிய சாலைகளை அமைப்பதற்கு ஏதுவாக பாதை உள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கூறுகையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் தொடங்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது மேலூர் நகர் தலைவர் முகமது யாசின், ஒன்றிய செயலா ளர்கள் பாலு, ராஜராஜன், மூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, வேலாயுதம், பொது குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதாஅப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال