கொடைக்கானல் நகர் பகுதியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் முத்துராமன், கொடைக்கானல் கோட்டக்கலால் வட்டாட்சியர் சந்தையில் மற்றும் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லாஸ்காட் ரோடு பகுதியில் உள்ள கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மூஞ்சிக்கல் பகுதி வரையிலும் மாணவிகள் பேரணியாக சென்றனர். இதில் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித ஜான்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொடைக்கானல் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி பேரணி மேற்கொண்டு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.