கெர்சன் பகுதியின் தலைவர் ஒலெக்சான்டர், டெலிகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு, தண்ணீர் மோசமான நிலையை இன்னும் ஐந்து மணி நேரத்தில் எட்டும். தற்போது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தும் பணி தொடங்கியதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் இடைக்கால உள்துறை மந்திரியின் ஆலோசகராக இருக்கும் ஆண்டோன் ஜெராஷ்சென்கோ, குண்டு வைத்து தகர்த்ததாகவும், இதற்கு பின்னால் ரஷியா உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரஷியா ஆக்கிரமித்துள்ள நோவா ககோவ்கா நகர நிர்வாகத் தலைவர் விளாடிமிர் லியோன்டிவ், அணை உடைந்ததாக கூறப்படும் செய்தியை மறுத்துள்ளார். ஆனால், ஒரு செய்தி நிறுவனத்திற்கு, அணை சேதம் அடைந்துள்ளது. அதற்கு உக்ரைன் தாக்குதல்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
கெர்சன் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் சக்கித் தவிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு மக்கள் வீடுகளை இழந்து தவிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஜபோரிஜ்ஜியா அணுஉலை குளிர்விப்பதற்கான நீரை பெறுவதில் சிக்கம் ஏற்படும் எனத் தெரிகிறது. கிரிமியாவின் பெரும்பகுதி பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிகிறது. ஆனால், ரஷியா அதிகாரிகள் மோசமான சேதம் அடைய வாய்ப்பு இல்லை என்கின்றனர். சதர்ன் பேங்க் பகுதியில் இருக்கும் இந்த அணை சோவித் ரஷியாவால் 1956-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. 30 மீட்டர் உயரத்திற்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் சேமித்து வைக்க முடியும். கெர்சன் நகரில் இருநது 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒருவேளை வெள்ளம் புகுந்தால் டினீபர் ஆற்றுப் பகுதிகள், ரஷியா வைத்துள்ள செதர்ன் பெங்க் பகுதிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.