No results found

    7 கோவில்களில் ரூ.36 கோடி செலவில் ராஜகோபுரம் கட்டப்படுகிறது- அமைச்சர் சேகர்பாபு தகவல்


    கடந்த 2 ஆண்டுகளில் 7 கோவில்களில் ராஜகோபுரம் கட்ட ரூ.36 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தில், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவில் குடமுழுக்கு பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அறிவுரைப்படி 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 47 கோவில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும், கடந்தாண்டு 118 கோவில்கள் திருப்பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடமுழுக்கு திருப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال