No results found

    ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி சொத்துப்பட்டியல்: தி.மு.க. பிரமுகர்கள் மீது அண்ணாமலை பரபரப்பு புகார்


    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளின் சொத்துப்பட்டியலை அவர் வெளியிட்டார். இதுதொடர்பாக ஒருமணிநேரம் விரிவாக விளக்கி பேட்டி அளித்ததுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அண்ணாமலை கூறியதாவது:- தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன் ரூ.50,219.37 கோடி சொத்துக்களை குவித்துள்ளார். எ.வ. வேலுவுக்கு சொந்தமாக ரூ.5442.39 கோடிக்கும், கே.என். நேருவுக்கு ரூ.2,495.14 கோடியும் சொத்துக்கள் உள்ளன.

    பொன்முடி ரூ.581 கோடி சொத்துக்களையும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1000 கோடி சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர். தி.மு.க. அமைச்சரான உதயநிதிக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கும், கனிமொழிக்கு ரூ.830.33 கோடி அளவுக்கும் சொத்துக்கள் உள்ளன. கலாநிதிமாறனுக்கு ரூ.12,450 கோடி சொத்துக்களும், டி.ஆர்.பாலுவுக்கு ரூ.10,840 கோடி சொத்துக்களும் இருக்கின்றன. தி.மு.க. மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ரூ.579.18 கோடியும், கலாநிதி வீராசாமி எம்.பி.க்கு ரூ.2,923 கோடியும், சபரீசனுக்கு ரூ.902 கோடியும், சொத்துக்கள் உள்ளன. இதனை வீடியோவாக வெளியிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

    இப்படி தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி என்கிற அளவில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆண்டு வருவாய் மதிப்பை விட தி.மு.க.வினரின் பினாமி சொத்துக்களின் மதிப்பு அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யிடம் நேரில் புகார் அளிக்க உள்ளேன். தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தி.மு.க.வினரின் முதல்கட்ட சொத்து பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளேன். அடுத்தடுத்து மேலும் பலரின் சொத்து விவரங்களை வெளியிட உள்ளேன். சொத்து பட்டியல் 4 பாகங்களாக உள்ளன. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன். தமிழகத்தில் ஊழலை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த பயணம் தொடரும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال