வயிற்றில் உள்ள அமிலமானது நெருப்பாக செயல்புரிந்து உண்ணும் உணவை எரித்து உடல் இயங்க தேவையான வெப்பத்தை வழங்குகிறது. சுவாசிப்பதாலும், உணவிலிருந்தும், நீரிலிருந்தும் பிராண சக்தி கிடைக்கிறது. இதில் அதிக அளவு சுவாசத்திலிருந்து பெறப்படுகிறது. நமது உடல் ஆகாய சக்தியை இந்த பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் நமக்கு ஆகாய சக்தியை மீட்டுத்தருவது உறக்கம். ஆழ்ந்த உறக்கத்தில் ஆகாய சக்தி மீட்டெடுக்கப்படுகிது. எப்போது ஆகாய சக்தி உடலில் குறைகிறதோ அப்போது சோர்வு ஆட்கொண்டு தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.
ஆகாய சக்தியை மீட்க மற்றொரு வழி தியானம் மற்றும் மனம் ஒருமித்து செய்யக்கூடிய செயல்கள். மனம் என்பது நம்மில் இருக்கும் ஒரு சூட்சும பொருள். இதனை இயக்குவதற்கு சூட்சும சக்தியான ஆகாய சக்தி தேவைப்படுகிறது. எப்போது மனதில் எண்ண ஓட்டங்கள் அடங்குகிறதோ அப்போது உடலில் ஆகாய சக்தியின் சேமிப்பு அதிகரிக்கிறது. ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும்போதுதான் கற்பதை கிரகிக்க முடிகிறது. மனதில் அளவுக்கு அதிகமான துக்கம் போன்றவற்றால் உடலில் ஆகாய சக்தி அதிக அளவில் குறைவதையே நவீன மருத்துவத்தில் மனஅழுத்தம் என்று அழைக்கிறார்கள். இதற்கு அளிக்கப்படும் மருந்துகள் மனதை சரி செய்யாது, அதற்கு பதிலாக தூக்கத்தை அளித்து ஆகாய சக்தியை மீட்டெடுக்கும் பணியை மட்டுமே செய்கிறது. எனவே மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் தான் வாழ்வில் முன்னேற்றங்களை காண இயலும்.
- சித்தர்களின் குரல்