11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும். 10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும். 9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான். 8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான். 7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான். 6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான். 5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும். 4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும். 3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும். 2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்.. 1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம். உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை. அன்ன பானம் நீங்கும்.
எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம். ஞாயிறு, செவ்வாய் , சனி - இம்மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும். வெள்ளி, திங்கள் , புதன் - இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும். வியாழக்கிழமை - பூர்வபட்சம் (வளர்பிறை) - சந்திர கலை ஓட வேண்டும். அமரபட்சம் (தேய்பிறை) - சூரிய கலை ஓட வேண்டும். இம்முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும். சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.