No results found

    Google Tamil News | இந்தியாவில் இறுதி நிலையில் தெரிந்த சந்திர கிரகணம்


    சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு சந்திரன் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி நேர சந்திர கிரகணமும் ஏற்படும். அதன்படி இன்று முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. இந்த கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகணம் இந்தியாவில் 5 மணி 12 நிமிடங்களுக்கு தெரியும் என கூறப்பட்டது. அதன்படி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை காண முடிந்தது. சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரியும் என கணிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    Previous Next

    نموذج الاتصال