No results found

    திருப்பதியில் இயற்கை விவசாய காய்கறியில் பக்தர்களுக்கு அன்னதானம்- தேவஸ்தான அதிகாரி தகவல்

    திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் ராயலசீமா மாவட்டங்களை சேர்ந்த இயற்கை விவசாயிகளுடனான சந்திப்பு கூட்டம் நடந்தது. தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமை தாங்கினார். நோய் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை இலக்காக கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை சாகுபடி செய்வதில் இயற்கை விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் தயாரிக்க தொடங்கினோம். இதேபோல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதம் தயாரிப்பிலும் இதை விரிவுபடுத்த விரும்புகிறோம். இயற்கை விவசாய பொருட்கள் மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளோம். இது இயற்கை விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
    Previous Next

    نموذج الاتصال