No results found

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் வாழ்த்து

    சென்னையில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதனால் ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதை சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீர்ப்பை கேட்டதுமே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாக கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லம் தொண்டர்கள் வருகையால் நிரம்பி வழிந்தது.

    Previous Next

    نموذج الاتصال