அந்தமான் நிகோபர் தீவில் திக்லிபூர் அருகே இன்று மதியம் 12.343 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு
Tamil News