No results found

    கக்குவான் இருமல் குணமாக

    கக்குவான் இருமல் குணமாக

    நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு, சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை அரை டம்ளர் கொடுக்க குணமாகும்.

    வயிற்று பூச்சிகள் ஒழிய

    வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

    மலச்சிக்கல் தீர

    பேயன் வாழைப்பழம் தோலுடன் வில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணையில் ஊற வைக்கவும் பாட்டிலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணையுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்.

    குழந்தைகளுக்கு கண் சூடுதனிய

    நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

    இரத்தத்தை சுத்தப்படுத்த

    இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தம் ஆகும்.

    Previous Next

    نموذج الاتصال