No results found

    பேறுகால வலிக்கு...

    பெண்களுக்கு பேறுகால வலி :

    முருங்கை இலை ஒரு பிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறு கால வலி குறையும்.

    தாது விருத்தியாக :

    பலாக் கொட்டையை அவித்து பின் காயவைத்து நன்றாக காய்ந்தவுடன் பவுடராக்கி அந்த பவுடரை கருப்பட்டியுடன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட தாது விருத்தி ஆகும்.

    நீர்த்தாரையில் எரிச்சல் குணமாக :

    அகத்தி வேரையும், அருகம்புல் வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர ஆண்குறியில் எரிச்சல் குணமாகும்.

    செருப்புகடி குணமாக :

    தென்னை ஓலையை தனாலில் போட்டு கருக்கி பட்டு போல் தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழம்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

    தலைவலி குணமாக :

    அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.

    நரைபோக்க :

    தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை மாறிவிடும்.

    சீதபேதி குணமாக :

    முருங்கை கீரை கைபிடி அளவு, சோற்று உப்பு சிறிதளவு சேர்த்து வறுக்க வேண்டும். இலை சாம்பலாக மாறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்த இந்த சாம்பல் தேக்கரண்டி அளவு வெந்நீரில் 21 வேளை குடிக்க குணமாகும்.

    விந்து கெட்டிபட :

    ஆலமரத்தின் இளம் கொழுந்து மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, விந்து கெட்டிபடும்.

    முடி வளர்வதற்கு :

    கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும் தலைமுடி அடர்த்தியும், கருப்பாகவும் ஆகும்.

    கருப்பு முடியாக மாற்ற :

    காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

    Previous Next

    نموذج الاتصال