அதிகாரம் 1
1 நம் தந்தையாகிய கடவுளுக்குள்ளும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும்
வாழுகின்ற தெசலோனிக்கேய மக்களின் சபைக்கு, சின்னப்பனும் சில்வானும் தீமோத்தேயுவும்
எழுதுவது:
2 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
3 சகோதரர்களே, உங்களை நினைத்துக் கடவுளுக்கு நாங்கள் என்றும் நன்றி செலுத்தக்
கடமைப்பட்டிருக்கிறோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில், உங்கள் விசுவாசம்
வளர்ந்து ஓங்குகிறது@ நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும் பெருகி
வருகிறது.
4 உள்ள படியே. நீங்கள் வேதனைக்குள்ளாகித் துன்புறுத்தப்பட்ட போதெல்லாம் காட்டிய மன
உறுதியையும் விசுவாசத்தையும் கண்டு, நாங்களும் கடவுளின் சபைகளில் உங்களைக்
குறித்துப் பெருமையாகப் பேசுகிறோம்.
5 நீங்கள் படும் பாடெல்லாம் கடவுளின் அரசுக்காகவே, இத்துன்பங்கள் நீங்கள் கடவுளின்
அரசுக்குத் தகுதியுள்ளவர்கள் என்பதை விளங்கச் செய்து, துன்பங்களில் நீங்கள்
காட்டும் மன உறுதியும் விசுவாசமும் கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு
அத்தாட்சி.
6 எவ்வாறெனில், உங்களை வேதனைப்படுத்துவோருக்குத் தண்டனையாக வேதனையையும்,
~வேதனையுறும் உங்களுக்குக் கைம்மாறாக எங்களோடு இளைப்பாற்றியையும் அளிப்பது
கடவுளுடைய நீதிக்கு ஏற்றதேயன்றோ?
7 நம் ஆண்டவராகிய இயேசு வெளிப்படும் நாளில் இப்படி நிகழும்.
8 அந்நாளில், கொழுந்துவிட்டெரியும் தீயின் நடுவே, இயேசு வல்லமை மிக்க தம்
தூதர்களோடு வானினின்று இறங்கி வருவார்@ வந்து, கடவுளை அறியாதவர்களையும், நம்
ஆண்டவராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் பழி வாங்குவார்.
9 இவர்கள் ஆண்டவருடைய வல்லமை விளங்கும் மாட்சிமையைக் காண முடியாமல் அவருடைய
திருமுன்னிருந்து அகற்றப்பட்டு, முடிவில்லாத அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.
10 தம்முடைய பரிசுத்தர்கள் நடுவே மகிமை பெறவும், விசுவசித்தோர் அனைவர் நடுவிலும்
வியந்து போற்றப்படவும் அவர் வரும் அந்நாளில் இவையெல்லாம் நடைபெறும். நாங்கள்
உங்களுக்கு அளித்த சாட்சியத்தை விசுவசித்ததால் நீங்களும் அதில் கலந்துகொள்வீர்கள்.
11 இதற்கென உங்களுக்காக என்றும் செபிக்கிறோம்@ நம் கடவுள் தாம் விடுத்த அழைப்பிற்கு
உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவாராக. உங்கள் நற்கருத்து ஒவ்வொன்றையும்,
விசுவாசத்தால் ஏவப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக.
12 இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப,
உங்கள் வழியாக நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும், அவருள் உங்களுக்கும் மகிமை
உண்டாகும்.